follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP1பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட 3 சட்டமூலங்கள் நீதித்துறையுடன் இணைக்கப்பட்டன!

பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட 3 சட்டமூலங்கள் நீதித்துறையுடன் இணைக்கப்பட்டன!

Published on

கடந்த பாராளுமன்ற வாரத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட 3 சட்டமூலங்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று அத்தாட்சிப்படுத்தியுள்ளார்.

இதற்கமைய அண்மையில் நிறைவேற்றப்பட்ட தனியார் தரவு பாதுகாப்பு, தொழிலாளர் இழப்பீடு மற்றும் காணி அபிவிருத்தி ஆகிய சட்டமூலங்கள் இவ்வாறு சட்டமாக்கப்பட்டு இலங்கையின் நீதித்துறையில் இணைக்கப்பட்டுள்ளன.

குறித்த சட்டங்கள் நேற்று முதல் சட்டமாக அமுல்படுத்தப்பட்டுள்ளதாக வருவதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனிப்பட்ட தரவுகளை பாதுகாப்பது தொடர்பான தரவுத்தள வழங்குநர்களின் உரிமைகளை அடையாளம் கண்டு அதனை வலுப்படுத்தும் நோக்கில் தனியார் தரவு பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

அத்துடன் தொழிலாளர் இழப்பீட்டு திருத்தச் சட்டத்தின் ஊடாக 550,000 ரூபாவாக காணப்பட்ட தொழிலாளர் இழப்பீட்டு தொகை 20 லட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரையில் வேலை நேரத்தில் ஏற்படும் விபத்துகளுக்கு மாத்திரம் இழப்பீடு வழங்கப்பட்டது.அது தற்போது பணிக்கும் செல்லும் போது அல்லது திரும்பும் போது ஏற்படுத்தும் விபத்துகளுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொஸ்கம துப்பாக்கிச் சூடு: தாய், மகள் உள்ளிட்ட மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (06) அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 12 வயது சிறுமி உட்பட மூன்று...

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...