follow the truth

follow the truth

February, 18, 2025
HomeTOP1பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட 3 சட்டமூலங்கள் நீதித்துறையுடன் இணைக்கப்பட்டன!

பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட 3 சட்டமூலங்கள் நீதித்துறையுடன் இணைக்கப்பட்டன!

Published on

கடந்த பாராளுமன்ற வாரத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட 3 சட்டமூலங்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று அத்தாட்சிப்படுத்தியுள்ளார்.

இதற்கமைய அண்மையில் நிறைவேற்றப்பட்ட தனியார் தரவு பாதுகாப்பு, தொழிலாளர் இழப்பீடு மற்றும் காணி அபிவிருத்தி ஆகிய சட்டமூலங்கள் இவ்வாறு சட்டமாக்கப்பட்டு இலங்கையின் நீதித்துறையில் இணைக்கப்பட்டுள்ளன.

குறித்த சட்டங்கள் நேற்று முதல் சட்டமாக அமுல்படுத்தப்பட்டுள்ளதாக வருவதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனிப்பட்ட தரவுகளை பாதுகாப்பது தொடர்பான தரவுத்தள வழங்குநர்களின் உரிமைகளை அடையாளம் கண்டு அதனை வலுப்படுத்தும் நோக்கில் தனியார் தரவு பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

அத்துடன் தொழிலாளர் இழப்பீட்டு திருத்தச் சட்டத்தின் ஊடாக 550,000 ரூபாவாக காணப்பட்ட தொழிலாளர் இழப்பீட்டு தொகை 20 லட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரையில் வேலை நேரத்தில் ஏற்படும் விபத்துகளுக்கு மாத்திரம் இழப்பீடு வழங்கப்பட்டது.அது தற்போது பணிக்கும் செல்லும் போது அல்லது திரும்பும் போது ஏற்படுத்தும் விபத்துகளுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை வருகிறார் மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர்

மாலைத்தீவுகளின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் பெப்ரவரி 18 முதல் 21 வரையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இவ்விஜயத்தின்...

வரவு செலவுத் திட்டம் மற்றும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அரசாங்கத்தினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. வரவு செலவுத் திட்டம் மற்றும் எதிர்வரும்...

உள்ளூராட்சித் தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் ஏகமனதாக நிறைவேற்றம்

உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மேலதிக பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 158 வாக்குகள் கிடைக்கப்...