follow the truth

follow the truth

July, 8, 2025
Homeஉள்நாடுமுன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு இடைக்காலத் தடை

முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு இடைக்காலத் தடை

Published on

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவர் தங்கியிருந்த உத்தியோகபூர்வ இல்லத்தை தொடர்ச்சியாக பயன்படுத்த அனுமதித்தமை தொடர்பில் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றத்தினால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 07, மஹகமசேகர மாவத்தை (பெஜெட் வீதி) வீட்டை அவருக்கு தொடர்ச்சியாக பயன்படுத்த அனுமதி வழங்கியமை தொடர்பில் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துள்ள நீதிமன்றம் இம்முடிவை அறிவித்துள்ளது.

இன்றையதினம் (29) உயர் நீதிமன்ற நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட, மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரு மாத கால அவகாசத்தின் அடிப்படையில் குறித்த இடைக்காலத் தடை அமுல்படுத்தப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வருடாந்தம் 10,000 – 12,000 பேர் வரை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்

தேசிய விபத்து விழிப்புணர்வு வாரம் இன்று(07) முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ளது. நாட்டில் அதிகரித்துவரும் விபத்துகள் தொடர்பில்...

பாராளுமன்ற உறுப்பினராக நிஷாந்த ஜெயவீரவின் பெயர் வர்த்தமானியில்

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன சூரியப்பெருமவின் ராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப தேசிய மக்கள் சக்தி (NPP) பாராளுமன்ற உறுப்பினராக...

கல்வி சீர்திருத்தங்களின் இலக்கு கல்வியின் தரத்தை உயர்த்துவதாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது, பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் முன்னேற்றத்தை...