follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடுகட்டுநாயக்க விமான நிலையத்திலும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு; ஊழியர்களை வீடுகளிலிருந்து பணியாற்றுமாறு அறிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்திலும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு; ஊழியர்களை வீடுகளிலிருந்து பணியாற்றுமாறு அறிவிப்பு

Published on

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்களை இன்று(07) முதல் வீடுகளிலிருந்து பணி புரியுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஊழியர்களின் போக்குவரத்துக்கு தேவையான எரிபொருள் இன்மையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரச பையின் உப தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்தார்.

அதனடிப்படையில், அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

விமான நிலையத்திற்கு தேவையான எரிபொருளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை என ரஜீவ் சூரியாராச்சி கூறினார்.

எவ்வாறாயினும், விமான நிலையத்தின் ரேடார் (Radar) கட்டமைப்பு உள்ளிட்ட அத்தியாவசிய சேவையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான எரிசக்தியை இடையூறியின்றி பெற்றுக்கொள்ள முடிவதாக அதன் உப தலைவர் தெரிவித்தார்

இதனிடையே, விமானங்களுக்கான எரிபொருள் தேவையான அளவு கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தானத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

IMF ஒப்பந்தங்களை மீறியமை குறித்து கவனம் செலுத்திய நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் இலங்கை இடையிலான விரிவான கடன் வசதி (Extended Fund Facility –...

தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரிப்பு

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் தலிபான் அரசாங்கத்தை அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா விளங்குகிறது. ஆப்கானிஸ்தான்...

காசா இனப்படுகொலையால் இலாபம் ஈட்டும் உலகளாவிய நிறுவனங்கள்

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், காசாவில் நடந்த இனப்படுகொலையிலிருந்து இலாபம் ஈட்டியதற்காக...