follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுஇரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளியேற்றம்!

இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளியேற்றம்!

Published on

நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்விலிருந்து இரு  எம்.பி.க்களை  வெளியேற்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நடவடிக்கை எடுத்துள்ளாா்.

குறித்த இரு எம்.பிக்களையும் சபையிலிருந்து  வெளியேற்றுவதற்கென  நாடாளுமன்ற அமர்வு மீண்டும் சிறிது நேரத்துக்கு  இடைநிறுத்தப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி ஆகிய இருவருமே இவ்வாறு சபையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனா்.

நாடாளுமன்ற அமர்வை ஐந்து நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவால் அறிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து, மீண்டும் சபை அமர்வு ஆரம்பிக்கப்பட்டபோது சபாநாயகர் இந்த முடிவை அறிவித்தாா்.

சபை அமர்வுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமையின் காரணமாகவே இவர்கள் இருவரும் வெளியேற்றப்படுவதாக சபாநாயகர் சபையில் அறிவித்தாா்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வைத்தியர் மஹேஷியின் மகள் விளக்கமறியலில்

நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர் மஹேஷி விஜேரத்னவின் மகள் எதிர்வரும் ஜூலை 9 ஆம் திகதி வரை...

“வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி” – அரச அதிகாரிகளுக்கான விளக்கவுரை

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்டப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட “வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி” தொடர்பாக, குருநாகல்...

தேங்காய் விலையில் வீழ்ச்சி

சந்தையில் தேங்காயின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக, 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட...