நாட்டின் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் மேற்பட்ட மழை வீழ்ச்சி இடம்பெறக்கூடும் வளிமண்டளவியல் திணைக்கள அதிகாரி பிரிகா ஜயகொடி தெரிவித்தார்.
இதேவேளை ,காலை 8.30மணியுடனான 24 மணித்தியாளங்களில் ஆகக்கூடிய மழை வீழ்ச்சி பாதுக்கை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. இங்கு 157 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதேவேளை பல நீர்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதுடன், இராஜாங்கனை மற்றும் தெதுறு ஓயா நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் நீர்த்தேக்கங்களை சூழவுள்ள மக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
அங்கமுவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், தெதுறு ஓயா நீர்த்தேக்கத்திலும் 5 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் உன்னிச்சை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று திறக்கப்பட்டுள்ளது.