ஆப்கானிஸ்தானுக்கு மீட்பு பணிக்கு சென்ற உக்ரைன் விமானம் கடத்தல்

1429

தலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானில் வெளியேற்றும் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், உக்ரேனியர்களை வெளியேற்ற காபூலுக்கு சொன்ற உக்ரேனிய விமானம் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து அங்கிருந்து  தங்கள் நாட்டு மக்களை அமெரிக்கா, இந்தியா, உக்ரைன் உட்பட பல்வேறு நாடுகள் மீட்டு வருகின்றன.

அந்த வகையில், ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டு மக்களை மீட்க சென்ற உக்ரைன் விமானம் காபூலில் இருந்து தம் நாட்டு மக்களை மீட்டுவிட்டு சொந்த நாடு திரும்பி கொண்டிருந்த வேளையில் அடையாளம் தெரியாத நபர்களால்  விமானம் கடத்தப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

விமானம் தற்போது ஈரான் நாட்டிற்கு கடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here