follow the truth

follow the truth

July, 9, 2025
Homeஉள்நாடுஉடனடியாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டுமாறு சஜித் கோரிக்கை

உடனடியாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டுமாறு சஜித் கோரிக்கை

Published on

அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டத்தை முன்னெடுப்பதற்கு உடனடியாக கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டுமாறு சபாநாயகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டமா அதிபர், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்ட வரைவுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளை அழைக்குமாறு சஜித் பிரேமதாச குறித்த கடித்ததில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதம தலைவர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், இளம் தலைமுறை புத்திஜீவிகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் உட்பட முழு நாடும் நாடு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுக்காக பாராளுமன்றத்தை வலியுறுத்துவதாகவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே இந்த தருணத்தில் சபாநாயகர் எடுக்கும் தீர்மானங்களே நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என வலியுறுத்தியுள்ள எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகருக்கு அனுப்பியுள்ள கடிதத்திற்கு உடனடி பதிலை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காலதாமதம் செய்யவோ அல்லது விவாதிப்பதற்கோ இது நேரமல்ல என்றும், இந்தக் கோரிக்கைக்கு விரைவான பதிலை எதிர்பார்ப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அறிவின் மையமாக மாறும் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம்

ஐரோப்பிய ஒன்றியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் Inter Pares உலகளாவிய திட்டத்தின் தலைவர் கலாநிதி ஜொனதன் மர்ஃபி (Dr.Jonathan Murph) மற்றும்...

வைத்தியர் மஹேஷியின் மகளுக்கு பிணை

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நரம்பியல் வைத்திய...

மஹியங்கனை -15 வயது மாணவனுக்கு எய்ட்ஸ் உறுதி

மஹியங்கனை பகுதியில் 15 வயதுடைய பாடசாலை மாணவனுக்கு எய்ட்ஸ் நோய் (HIV) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதுளை...