follow the truth

follow the truth

July, 12, 2025
Homeஉள்நாடுசாய்ந்தமருது குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களை தோண்டி எடுக்க அனுமதி

சாய்ந்தமருது குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களை தோண்டி எடுக்க அனுமதி

Published on

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீண்டும் தோண்டியெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

DNA பரிசோதனைக்காக உடல் உறுப்புகள் தோண்டி எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தற்கொலை குண்டுத் தாக்குதலின் போது 17 பேர் உயிரிழந்ததாக விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட போதும், புலஸ்தினி மகேந்திரன் எனப்படும் சாரா ஜெஸ்மினின் உடல் பாகங்கள் காணப்பட்டதாக உடற் கூற்று பரிசோதன போது கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த தற்காலைத் தாக்குதலின் போது உயிழரிழந்த நபர்களின் உடல் பாகங்களை மீண்டும் தோண்டியெடுத்து பரிசோதனைக்கு உற்படுத்துவதற்கு விசாரணை அதிகாரிகளினால் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி அம்பாறை பொது மயானத்தில் நாளை காலை குறித்த உடல் பாகங்களை மீண்டும் தோண்டியெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...

ரயில் நிலைய அதிபர் பதவிக்கு ஆண்களை மட்டும் பணியமர்த்துவது தொடர்பாக 02 பெண்கள் மனுத் தாக்கல்

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என எடுக்கப்பட்டுள்ள முடிவால்...