follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுசீனிக்கான நிர்ணய விலை தொடர்பில் திங்கட்கிழமை தீர்மானம்

சீனிக்கான நிர்ணய விலை தொடர்பில் திங்கட்கிழமை தீர்மானம்

Published on

160 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் சீனியின் விலை 50 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் 160 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் சீனியின் விலை இந்த வாரம் 210 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, சீனி விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் விரைவில் தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாகவும் ஒரு கிலோகிராம் சீனியை 105 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியுமென இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண குறிப்பிட்டுள்ளார்.

எனினும், முறையற்ற விதத்தில் அதிக இலாபத்தை பெறும் நோக்கில் சீனி விலையை விற்பனையாளர்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனால் எதிர்வரும் திங்கட்கிழமை (30) சீனிக்கான நிர்ணய விலை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண மேலும் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...