நாட்டை மேலும் இரு வாரங்களுக்கு முடக்குமாறு ரணில் கோரிக்கை

916

வைத்திய ஆலோசனைக்கமைய மேலும் இரு வாரங்கள் நாட்டை முடக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் பரவிவரும் கொவிட் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு ஒரே வழி, நாட்டை முடக்குவது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது அரசாங்கத்தால் 10 நாட்கள் நாடு முடக்கப்பட்டுள்ளமை போதுமானதல்ல என்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பொருளாதார பாதிப்பு பற்றியும் சிந்திக்க வேண்டும். நாடு முடக்கப்படாமல் ஏற்படும் பாதிப்பை விடவும், நாடு முடக்கப்பட்டு ஏற்படும் பாதிப்பு குறைவு என அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே இந்த நிலைமையிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து பொருளாதாரத்திற்கான ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே நாம் வைத்திய ஆலோசனைக்கு அமைய செயற்படுவோம் என்று ஜனாதிபதி , பிரதமர் மற்றும் அமைச்சரவையிடம் கோருகின்றேன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here