follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடுஅக்கரைப்பற்றில் துப்பாக்கிச் சூடு - பொலிஸாரின் அறிக்கை

அக்கரைப்பற்றில் துப்பாக்கிச் சூடு – பொலிஸாரின் அறிக்கை

Published on

கல்முனை வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பொலிஸ் வீதித்தடையில் பொலிஸார் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு இரண்டு நபர்களுக்கு பணிப்புரை விடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பொலிஸாரின் கட்டளைகளைப் புறக்கணித்து, தனது மோட்டார் சைக்கிளில் இருந்து ஓட முயன்றுள்ளார் .

இந்த சம்பவத்தை தொடர்ந்து 700க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு பணியில் இருந்த இரு போலீஸ் அதிகாரிகளையும் தாக்கினர்.

ஏஎஸ்பி மற்றும் பொலிஸ் ஓஐசியும் சம்பவ இடத்துக்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பொலிஸாருக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை அதிகரித்ததையடுத்து, கோபமடைந்த கும்பல் அவருடைய கழுத்தை நெரிக்க முற்பட்டதால், தற்காப்புக்காக பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

பொலிஸாரின் கூற்றுப்படி, அப்பகுதியில் அமைதியின்மை தணிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 8 பொலிஸ் அதிகாரிகள், 2 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் 2 ஆர்ப்பாட்டக்காரர்கள் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

IMF ஒப்பந்தங்களை மீறியமை குறித்து கவனம் செலுத்திய நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் இலங்கை இடையிலான விரிவான கடன் வசதி (Extended Fund Facility –...

தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரிப்பு

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் தலிபான் அரசாங்கத்தை அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா விளங்குகிறது. ஆப்கானிஸ்தான்...

காசா இனப்படுகொலையால் இலாபம் ஈட்டும் உலகளாவிய நிறுவனங்கள்

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், காசாவில் நடந்த இனப்படுகொலையிலிருந்து இலாபம் ஈட்டியதற்காக...