follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுகாலிமுகத்திடல் தாக்குதலை கண்டித்து கொழும்பு தேசிய வைத்தியசாலை ஊழியர்கள், சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்

காலிமுகத்திடல் தாக்குதலை கண்டித்து கொழும்பு தேசிய வைத்தியசாலை ஊழியர்கள், சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்

Published on

கொழும்பு –  காலி முகத்திடலில் அமைதியான முறையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதில் 23 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், காலி முகத்திடலில் குவிந்துள்ள சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைச் சுற்றி கைகளைக் கோர்த்து அவர்களை பாதுகாத்து தமது ஆதரவை வெளிப்படுத்தினார்கள்.

அத்தோடு, ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு – புதுக்கடை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணிகள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதேவேளை  கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகத்தில் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட வைத்தியசாலை ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தபால் ஊழியர்களும் உடனடி வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொஸ்கம துப்பாக்கிச் சூடு: தாய், மகள் உள்ளிட்ட மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (06) அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 12 வயது சிறுமி உட்பட மூன்று...

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...