ஜனாதிபதி செயலக நுழைவாயிலில் உள்ள தடைகளை அகற்றக் கோரி உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு பொலிஸார் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கை மீதான விசாரணை, எதிர்வரும் 12 ஆம் திகதி எடுத்துக்கொள்ளபப்டும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பொலிஸார் முன்வைத்த இந்த கோரிக்கை கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் இன்று (10) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் “கோட்டகோகம” போராட்டத்தின் காரணமாக ஜனாதிபதி செயலகத்துக்கான நுழைவாயிலுக்கு இடையூறு ஏற்படுவதாக கோரி கடந்த வெள்ளிக்கிழமை கோட்டை பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.