குரங்கு அம்மை தொற்று உலகின் பல நாடுகளில் பரவியுள்ளது. இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இந்த வைரஸ் தாக்கும் அபாயம் அதிகமென வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குரங்கு அம்மை வைரஸ் தொற்றுக்கு உள்ளாவனர்களுடன் நெருங்கிய தொடர்புடைய நபர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு அமெரிக்க தீர்மானித்துள்ளது.
அமெரிக்காவில் குரங்கு அம்மை வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஐந்து பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில்,குரங்கு அம்மை வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.