அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் ஆயுததாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தினால் ஆசிரியர் ஒருவர் உள்ளிட்ட 21 பேர் உயிரிழந்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துனை ஜனாதிபதி கமலா ஹரீஸ் ஆகியோர் கடுமையான கண்டனத்தினை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் அண்மையில் நடந்த தாக்குதலில் மிகவும் கொடூரமான தாக்குதல் இதுவென அந்நாட்டின் துணை ஜனாதிபதி கமலா ஹரீஸ் தெரிவித்துள்ள நிலையில், தாக்குதல் தொடர்பில் இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்புகோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.