follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉள்நாடு5 கோடி ரூபாய் மதிப்புள்ள கேரள கஞ்சா மீட்பு! - கிளிநொச்சியில் சம்பவம்!

5 கோடி ரூபாய் மதிப்புள்ள கேரள கஞ்சா மீட்பு! – கிளிநொச்சியில் சம்பவம்!

Published on

கிளிநொச்சி விவேகாநந்தா நகர் பிரதேசத்தில் 208 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கேரள கஞ்சா சுமார் 208 கிலோ எடையுடையது எனவும், அதன் இலங்கை பெறுமதி 5 கோடி மதிக்கத்தக்கது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த குற்றச்சாட்டின்பேரில் மன்னார் பகுதியினை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் கஞ்சாவினை கடத்த பயன்படுத்தியதாக கருதப்படும் சொகுசு கார் ஒன்றினையும் அவரிடமிருந்து விஷேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கோபா குழுவில் முன்னிலையான ரயில்வே திணைக்களம்

பல வருடங்களாக கணக்காய்வு அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க ரயில்வே திணைக்களம் தவறியுள்ள விடயம் கோபா குழுவின் முன்னிலையில் தெரியவந்தது. இதன்...

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையினால் உஷாராகும் வாகன இறக்குமதி

நான்கு வருடங்களுக்குப் பின்னர், இடைநிறுத்தப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டமையினால் வாகன இறக்குமதி துறையினர் நன்மையடைந்து வருகின்றனர். இதற்கமைய தற்போது...

ஹஜ் யாத்திரை செல்லும் முதலாவது இலங்கை யாத்திரிகர்கள் குழு பயணம்

இம்முறை ஹஜ் யாத்திரை செல்லும் முதலாவது இலங்கை யாத்திரிகர்கள் குழு இன்றைய தினம் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது. அவர்களை யாத்திரைக்கு...