follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடு2 கோடி பெறுமதி வாய்ந்த அப்பிள் பழங்கள் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு வழங்கப்பட்டன!

2 கோடி பெறுமதி வாய்ந்த அப்பிள் பழங்கள் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு வழங்கப்பட்டன!

Published on

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 24,000 கிலோ கிராம் ஆப்பிள் பழ தொகையினை அதன் உரிமையாளர்கள் பெற்றுக் கொள்ளாததன் காரணமாக அது தெஹிவளை மிருகக்காட்சிசாலையிலுள்ள விலங்குகளுக்கு உணவாக வழங்கப்பட்டுள்ளது.

குறித்த ஆப்பிள் கொள்கலன்களை அதனை இறக்குமதி செய்தவர்கள் இதுவரையில் கொண்டு செல்லாமல் இருப்பது தொடர்பாக தனக்கு வழங்கப்பட்ட தகவல் ஒன்றை அடுத்து குறித்த சி.அய்.சி.டி நிறுவனத்திடம் நடத்திய பேச்சுவார்த்தையினை அடுத்தே இவற்றை மிருககாட்சிசாலைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக துறைமுக அபிவிருத்தி விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வா தெரிவித்துள்ளார்.

இது போன்று இன்னும் பல பொருட்களை அவை வீணாக்கப்படாமல் அல்லது அழிக்கப்படாமல் அதனை பிரயோசனமான ஒரு விடயத்திற்காக பயன்படுத்துவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் துறைமுக அதிகாரிகளுக்கு இதன்பொழுது பணிப்புரை வழங்கியுள்ளார்.

இவ்வாறு வழங்கப்பட்ட அப்பிள் பழங்கள் சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியுள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

IMF ஒப்பந்தங்களை மீறியமை குறித்து கவனம் செலுத்திய நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் இலங்கை இடையிலான விரிவான கடன் வசதி (Extended Fund Facility –...

தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரிப்பு

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் தலிபான் அரசாங்கத்தை அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா விளங்குகிறது. ஆப்கானிஸ்தான்...

காசா இனப்படுகொலையால் இலாபம் ஈட்டும் உலகளாவிய நிறுவனங்கள்

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், காசாவில் நடந்த இனப்படுகொலையிலிருந்து இலாபம் ஈட்டியதற்காக...