follow the truth

follow the truth

February, 18, 2025
HomeTOP1தென்னாப்பிரிக்க வைரஸ் திரிபு நாட்டிற்குள் நுழைவதை தவிர்க்க முடியாது

தென்னாப்பிரிக்க வைரஸ் திரிபு நாட்டிற்குள் நுழைவதை தவிர்க்க முடியாது

Published on

தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் திரிபு நாட்டிற்குள் நுழைவதை தவிர்க்க முடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

C.1.2 என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வைரஸ் திரிபானது மிகவும் ஆபத்தானது எனவும், மிக வேகமாக பரவும் தன்மையைக் கொண்டது எனவும் விசேட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த புதிய வைரஸ் திரிபுகளை உடனடியாக கண்டுப்பிடிக்க முடியுமாயின் அதனை தவிர்க்க முடியும் எனவும் ஆனால் அதனை இனங்காண்பதில் தாமதமாவதாக விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இதற்கு முன்னர் அங்கு பரவலடைந்த வைரஸ் திரிபும் இலங்கையில் அடையாளம் காணப்பட்டதாகவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

C.1.2 என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வைரஸ் திரிபானது தென்னாப்பிரிக்காவில் முதன் முதலில் கடந்த மே மாதம் கொரோனாவின் மூன்றாவது அலையின் போது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை வருகிறார் மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர்

மாலைத்தீவுகளின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் பெப்ரவரி 18 முதல் 21 வரையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இவ்விஜயத்தின்...

வரவு செலவுத் திட்டம் மற்றும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அரசாங்கத்தினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. வரவு செலவுத் திட்டம் மற்றும் எதிர்வரும்...

உள்ளூராட்சித் தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் ஏகமனதாக நிறைவேற்றம்

உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மேலதிக பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 158 வாக்குகள் கிடைக்கப்...