follow the truth

follow the truth

July, 4, 2025
HomeTOP1தென்னாப்பிரிக்க வைரஸ் திரிபு நாட்டிற்குள் நுழைவதை தவிர்க்க முடியாது

தென்னாப்பிரிக்க வைரஸ் திரிபு நாட்டிற்குள் நுழைவதை தவிர்க்க முடியாது

Published on

தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் திரிபு நாட்டிற்குள் நுழைவதை தவிர்க்க முடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

C.1.2 என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வைரஸ் திரிபானது மிகவும் ஆபத்தானது எனவும், மிக வேகமாக பரவும் தன்மையைக் கொண்டது எனவும் விசேட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த புதிய வைரஸ் திரிபுகளை உடனடியாக கண்டுப்பிடிக்க முடியுமாயின் அதனை தவிர்க்க முடியும் எனவும் ஆனால் அதனை இனங்காண்பதில் தாமதமாவதாக விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இதற்கு முன்னர் அங்கு பரவலடைந்த வைரஸ் திரிபும் இலங்கையில் அடையாளம் காணப்பட்டதாகவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

C.1.2 என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வைரஸ் திரிபானது தென்னாப்பிரிக்காவில் முதன் முதலில் கடந்த மே மாதம் கொரோனாவின் மூன்றாவது அலையின் போது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்...