follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுகல்கிஸையிலிருந்து காங்கேசன்துறை செல்லும் ரயில் சேவை இன்றுமுதல் ஆரம்பம்!

கல்கிஸையிலிருந்து காங்கேசன்துறை செல்லும் ரயில் சேவை இன்றுமுதல் ஆரம்பம்!

Published on

பிரதி வெள்ளிக்கிழமைகளில், கல்கிஸையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி செல்லும் குளிரூட்டப்பட்ட முதலாம் வகுப்பு நகர்சேர் கடுகதி ரயில் ஒன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

10 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் 520 ஆசனங்கள் உள்ளதாக ரயில் திணைக்கள பிரதிப் பொது முகாமையாளர் வீ.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.

கல்கிஸையில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்படும் குறித்த ரயில், மறுநாள் அதிகாலை 5.25க்கு யாழ்ப்பாணத்தை சென்றடைந்து, 5.30க்கு புறப்பட்டு காங்கேசன்துறையை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் குறித்த ரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் காங்கேசன்துறையில் இருந்து இரவு 10 மணிக்கு மீண்டும் கொழும்பு நோக்கி புறப்பட்டு கல்கிஸையை சென்றடையும்.

குறித்த ரயிலுக்கான பயணக் கட்டணம் 2,800 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...