follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுஇலங்கை உட்பட 10 நாடுகள் மீதான பயணத் தடையை நீக்கிய பிலிப்பைன்ஸ்

இலங்கை உட்பட 10 நாடுகள் மீதான பயணத் தடையை நீக்கிய பிலிப்பைன்ஸ்

Published on

டெல்டா வைரஸ் பரவல் காரணமாக இலங்கை உட்பட 10 நாடுகளுக்கு விதித்துள்ள பயணத்தடையை நாளை மறுதினம்(06) முதல் நீக்குவதற்கு பிலிப்பைன்ஸ் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்திருந்தது.

பயணத்தடை நீக்கப்பட்டதன் பின்னர் அந்நாட்டுக்கு வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...