எதிர்வரும் 15-17 ஆம் திகதிகளுக்கு உட்படப்ட காலப்பகுதியில் வரவுள்ள டீசல் தொகைக்கான முழுப்பணமும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் 22-24 ஆம் திகதிகளுக்கு உட்படப்ட காலப்பகுதியில் வரவுள்ள பெட்ரோல் தொகைக்கான முழுப்பணமும் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 15-17 ஆம் திகதிகளுக்கு உட்படப்ட காலப்பகுதியில் வரவுள்ள டீசல் கப்பல் மற்றும் 17-19 ஆம் திகதிகளுக்கு உட்படப்ட காலப்பகுதியில் வரவுள்ள பெட்ரோல் கப்பலுக்கான முற்பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
1) On Friday, full payments were made with the assistance of @CBSL & MOF to IOC for a Diesel Cargo to arrive 15-17 & a Petrol Cargo for 22-24. Advance payments were made last week for a Diesel cargo to arrive 15-17 & Petrol 17-19. Balance payment to be made today for the Diesel.
— Kanchana Wijesekera (@kanchana_wij) July 11, 2022