follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுகடவுச்சீட்டு மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது

கடவுச்சீட்டு மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது

Published on

குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தின் கண்டி கிளை ஊடாக, வெளிநாட்டு கடவுச் சீட்டுகளைப் பெற வரும் இளைஞர்களிடம் மோசடியில் ஈடுபட்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஒருநாள் மற்றும் சாதாரண விநியாகத்துக்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகக் கூறி 6,000 தொடக்கம் 50,000 ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட குறித்த அலுவலகத்தின்  பணியாளர் ஒருவரும் மேலும் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என கண்டி பொலிஸ் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒருநாள் மற்றும் சாதாரண சேவையாக வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் கண்டி அலுவலகம் ஊடாக விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு  கடவுச்சீட்டுகளை பெற்றுவதற்காக வருவோரிடம் முன்கூட்டியே பெற்றுத்தருவதாகக் கூறி சந்தேகநபர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கமைய, ஒரு நாள் சேவைக்காக 40,000 தொடக்கம் 50,000 வரை சந்தேகநபர்களால் பெற்றுக்கொள்ளப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தெஹியத்தகண்டியிலிருந்து கடவுச்சீட்டுகளை பெறுவதற்கு வருகைத் தந்த இளைஞர் ஒருவரிடம் 25,000 ரூபாய் முற்பணம் பெற்றுக்கொண்ட போதே, சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதில் குறித்த குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தில் கடமையாற்றும் இளைஞரும் ஓட்டோ சாரதியொருவரும் மாத்தளையைச் சேர்ந்த நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை முதலில் இளைஞர்கள் சிலரே பிடித்துள்ள நிலையில், அவர்களை எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்காமல், அங்கிருந்த அதிகாரிகள் விடுவிக்க நடவடிக்கை எடுத்த போது, அங்கு கூடியிருந்த ஏனைய இளைஞர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்தே சந்தேகநபர்கள் கண்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...