எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இன்றும்(11) முறையான பஸ் போக்குவரத்து முன்னெடுக்கப்படாதென இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம்(11), 500 பஸ்களை மாத்திரமே போக்குவரத்தில் ஈடுபடுத்தவுள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சாலைகளின் ஊடாக தமக்கான எரிபொருள் கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, எரிபொருள் நெருக்கடி காரணமாக மாகாணங்களுக்கிடையிலான பஸ் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனிடையே, ரயில் சேவைகள் இன்று(11) வழமைபோன்று முன்னெடுக்கப்படுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது