follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுபொது போக்குவரத்தில் தொடர்ந்தும் சிக்கல்

பொது போக்குவரத்தில் தொடர்ந்தும் சிக்கல்

Published on

எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இன்றும்(11) முறையான பஸ் போக்குவரத்து முன்னெடுக்கப்படாதென இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம்(11), 500 பஸ்களை மாத்திரமே போக்குவரத்தில் ஈடுபடுத்தவுள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சாலைகளின் ஊடாக தமக்கான எரிபொருள் கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, எரிபொருள் நெருக்கடி காரணமாக மாகாணங்களுக்கிடையிலான பஸ் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனிடையே, ரயில் சேவைகள் இன்று(11) வழமைபோன்று முன்னெடுக்கப்படுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...