பராலிம்பிக் போட்டி – இலங்கை வீரர்களுக்கு ஜப்பானில் கார்கள் அன்பளிப்பு

636

பராலிம்பிக் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்ற இரண்டு இலங்கை வீரர்களுக்கு ஜப்பானில் உள்ள இலங்கை வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம் இரண்டு நவீன ரக கார்களை பரிசாக வழங்கி கௌரவித்துள்ளது.

டோக்கியோவில் நடைபெற்ற பராலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான பிரிவு 64 இன் ஈட்டி ஏறிதல் போட்டியில் பங்கேற்ற துலான் கொடிதுவக்கு 65.61 மீற்றர் தூரம் வீசி வெண்கல பதக்கம் வென்றார்.

மேலும், ஆண்களுக்கான பிரிவு 46 இல் களமிறங்கிய இலங்கையின் தினேஷ் பிரியன்த 67.79 மீற்றர் தூரத்துக்கு எறிந்து புதிய உலக சாதனை மற்றும் பராலிம்பிக் சாதனைகளுடன் தங்கப்பதக்கம் வென்று வராலற்றில் இடம்பிடித்தார்.

No description available.

No description available.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here