follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுஜனாதிபதி மாளிகையில் இருந்து மீட்கப்பட்ட பணம் கையளிப்பு

ஜனாதிபதி மாளிகையில் இருந்து மீட்கப்பட்ட பணம் கையளிப்பு

Published on

 ஜூலை 9 ஆம் திகதி  ஜனாதிபதி மாளிகையில் இருந்து  மீட்கப்பட்டு பின்னர் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட 1,78,50,000 ரூபா பணம் நேற்று நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட உத்தரவிற்கு ஏற்ப இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்திடம் கையளிக்கப்பட்டது.

கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் உள்ள கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரால் இந்த பணம் நீதிமன்றத்திடம் கையளிக்கப்பட்டது.

கடந்த 9 ஆம் திகதி கோட்டை பொலிஸ் நிலையத்தில் குறித்த பணம் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், மூன்று வாரங்களாக அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக நீதவான் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட பணம் கொம்பனித்தெரு பொலிஸ் நிலைய விசேட பிரிவு ஊடாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றமைக்கு நியாயமான காரணம் இருக்கிறதா என்பது நீதிமன்றத்திற்கு தெரியாது எனவும் கூறியுள்ளார்.

பணத்தை கையளிப்பதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு  நீதவான் திலின கமகே பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...