பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவமொன்று இன்று பிற்பகல் பதிவாகியுள்ளது.
பயணிப்பதற்கு தயாராக காரே இவ்வாறு தீப்பிடித்து பற்றி எரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து கொழும்பு மாநகர சபையின் இரு தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி தீயினை கட்டுக்குள் கொண்டுவந்ததாகவும், விபத்துக்கான காரணம் இதுவுரையில் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.