மாத்தறை – டோண்ட்ரா கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகு ஒன்றில் இருந்து 6 மீனவர்கள் இன்று (19) அதிகாலை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
படகு கப்பல் ஒன்றுடன் மோதி நேற்று (18) இரவு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த படகு விபத்து தொடர்பில் மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.