follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுஇலங்கை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடி கவலையளிப்பதாக மொஹமட் நஷீட் தெரிவிப்பு

இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடி கவலையளிப்பதாக மொஹமட் நஷீட் தெரிவிப்பு

Published on

 இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடி கவலையளிப்பதாக மாலைத்தீவுகளின் சபாநாயகர் மொஹமட் நஷீட் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள ​மொஹம்மட் நஷீட், அந்நாட்டு  வௌிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை நேற்று சந்தித்துள்ளார்.

இதன்போது, இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடியதாக மாலைத்தீவுகளின் சபாநாயகர் மொஹமட் நஷீட் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கான சர்வதேச உதவிகளை ஒருங்கிணைப்பதற்காக மாலைத்தீவுகளின் சபாநாயகரும் முன்னாள் ஜனாதிபதியுமான மொஹமட் நஷீட் முன்வைத்த யோசனையை கடந்த மே மாதம்  19 ஆம் திகதி, அவ்வேளையில் பிரதமராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...