follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுஇறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டும் - மத்திய வங்கி ஆளுநர்

இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டும் – மத்திய வங்கி ஆளுநர்

Published on

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, பொருளாதார வளர்ச்சி விகிதத்தை வழமை நிலைக்கு கொண்டு வர பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறுவோரை பாதுகாக்க சமூக பாதுகாப்பு வலையமைப்பிற்கு பணம் ஒதுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதியும் கட்டுப்படுத்தப்பட வேண்டும், பெட்ரோல், மருந்து, எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்க வேண்டும். அரசாங்கத்தின் வருவாய் 14 முதல் 15 சதவீதம் வரை உயர்த்தப்பட வேண்டும்.

பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள அசௌகரியங்களை குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமன்றி அதிக வருமானம் உள்ளவர்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்..

இறக்குமதியை கட்டுப்படுத்தியதன் மூலம் கடந்த ஆண்டு ஏற்பட்ட 2 பில்லியன் செலவை இந்த ஆண்டு 1.3 பில்லியனாக குறைக்க முடிந்தது. அதற்கமையவே மருந்துகள், எரிபொருள், எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடிந்தது.

தற்போது நாட்டின் வருமானம் சுமார் 1.2 பில்லியன் டொலர்களாகும். தொடர்ந்து அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம் பொதுச் செலவினங்களைக் கட்டுப்படுத்த முடியுமாயின் அது நாட்டின் வருமானத்திற்கு முக்கியமானதாக அமையும் என மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அசௌகரியங்களை குறைந்த பட்சம் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையாவது தாங்க வேண்டியிருக்கும் என நந்தலால் வீரசிங்க கூறியுள்ளார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் முன்னோக்கு தொடர்பில் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மத்திய வழங்கி ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...