follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுபொது மனுக்கள் பற்றிய குழுவின் தலைவராக ஜகத் புஷ்பகுமார தெரிவு

பொது மனுக்கள் பற்றிய குழுவின் தலைவராக ஜகத் புஷ்பகுமார தெரிவு

Published on

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடருக்கான பொது மனுக்கள் பற்றிய குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜகத் புஷ்பகுமார மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். ஜகத் புஷ்பகுமாரவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் பிரியங்கர ஜயரத்ன முன்மொழிந்ததுடன் பாராளுமன்ற உறுப்பினர்  வடிவேல் சுரேஷ் வழிமொழிந்தார்.

அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பொது மனுக்கள் பற்றிய குழுவின் முதலாவது கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

ஜகத் புஷ்பகுமார அவர்கள் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரிலும் பொது மனுக்கள் பற்றிய குழுவின் தலைவராக செயற்பட்டார்.

பாராளுமன்றத்தின் 120(1) ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் பாராளுமன்ற தெரிவுக்குழுவினால் பொது மனுக்கள் பற்றிய குழுவுக்கு அண்மையில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

அதற்கமைய,  இம்தியாஸ் பாகிர் மாகார்,  பியங்கர ஜயரத்ன, கௌரவ திலிப் வெதஆரச்சி,  வடிவேல் சுரேஷ்,கௌரவ ச. வியாழேந்திரன், கௌரவ அசோக்க பிரியந்த, அரவிந்த் குமார், கீதா சமன்மலீ குமாரசிங்ஹ,  பீ.வை.ஜீ. ரத்னசேக்கர, சாரதீ துஷ்மந்த, கோவிந்தன் கருணாகரம், ஜயந்த கெட்டகொட, மொஹமட் முஸம்மில், துஷார இந்துனில் அமரசேன,  வேலு குமார், வருண லியனகே, கௌரவ யூ.கே. சுமித் உடுகும்புர, மாயாதுன்ன சிந்தக அமல், நிபுண ரணவக, கௌரவ காமினி வலேபொட, ராஜிகா விக்கிரமசிங்ஹ, எம். டப்ளியு. டீ. சஹன் பிரதீப் விதான ஆகியோர் பொது மனுக்கள் பற்றிய குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

ஊடக அறிக்கை

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...