follow the truth

follow the truth

June, 28, 2025
Homeஉள்நாடு11 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

11 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

Published on

யாழ்ப்பாணம் – மணல்காடு பகுதியில் 37 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரால் நேற்றிரவு(05) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த தொகை கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.

சம்பவம் தொடர்பில் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

யாழ்.கிளாலி பகுதியை சேர்ந்த 17 மற்றும் 29 வயதான இரு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா 11 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியானது என மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களையும்.கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பளை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாரஹேன்பிட்டியில் 3வது ஒசுசல திறக்கப்பட்டது

நாடு பூராகவும் அமைந்துள்ள 130 இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை வைத்தியசாலைகளும் உள்ளடங்கும் வகையில் பிரதானமான தனியார்...

இறக்குமதி, ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிக்கு அனுமதி

1969ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2025 மே 19ஆம் திகதிய...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவர் விளக்கமறியலில்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க, ஜூலை முதலாம்...