கொழும்பு துறைமுக நகர செயற்கை கடற்கரை பகுதியில் நீராடச்சென்று நீரில் மூழ்கி காணாமல்போன பல்கலைக்கழக மாணவனின் சடலம் இன்று(27) கரையோதுங்கிய நிலையில் மீட்கப்பட்டது.
கொழும்பு துறைமுக பொலிஸ், கடற்படைப் பிரிவு மற்றும் ரங்கல கடற்படை டைவர்ஸ் இன்று (27) மேற்கொண்ட நடவடிக்கையின் போது இந்த மாணவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடலினுள் நீந்திக் கொண்டிருந்த நிலையில் காணாமல் போன மாணவர் தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து சுழியோடிகளின் உதவியுடன் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்றையதினம் பிற்பகல் மாணவனின் சடலம் கொழும்பு துறைமுக நகர கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.
24 வயதுடைய அஸ்கிரிய கம்பஹா பகுதியை சேர்ந்த கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்று வந்த மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு துறைமுகப் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.