follow the truth

follow the truth

June, 28, 2025
Homeஉள்நாடுபாகிஸ்தான் மக்களுக்கு இலங்கை தேயிலையை வழங்கியுள்ளது!

பாகிஸ்தான் மக்களுக்கு இலங்கை தேயிலையை வழங்கியுள்ளது!

Published on

பாகிஸ்தானில் கடந்த வாரங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசாங்கம் சிலோன் தேயிலையை நன்கொடையாக வழங்கியுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நேற்று (05) பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் உமர் பாரூக் புர்கியிடம், வெளிவிவகார அமைச்சில் வைத்து சிலோன் தேயிலையை கையளித்தார்.

இந்த சந்திப்பின் போது, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அமைச்சர் அனுதாபங்களை தெரிவித்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் ஆதரவையும் ஒற்றுமையையும் அமைச்சர் சப்ரி தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது வெளியுறவு அமைச்சகம் மற்றும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் மூத்த அதிகாரிகளும் உடனிருந்தனர்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாரஹேன்பிட்டியில் 3வது ஒசுசல திறக்கப்பட்டது

நாடு பூராகவும் அமைந்துள்ள 130 இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை வைத்தியசாலைகளும் உள்ளடங்கும் வகையில் பிரதானமான தனியார்...

இறக்குமதி, ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிக்கு அனுமதி

1969ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2025 மே 19ஆம் திகதிய...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவர் விளக்கமறியலில்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க, ஜூலை முதலாம்...