follow the truth

follow the truth

June, 28, 2025
Homeஉள்நாடுஎரிபொருள் விநியோகம் தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள அறிக்கை

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள அறிக்கை

Published on

நாளாந்தம் சுமார் 300 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் இன்றி மூடப்படுவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என இலங்கை பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள எரிபொருள் இருப்பு அனைத்து துறைகளுக்கும் நியாயமான முறையில் விநியோகிக்கப்பட வேண்டியிருப்பதால், முறையான நிர்வாகத்துடன் எரிபொருள் இருப்புக்களை விநியோகிக்க எடுக்கப்பட்ட தீர்மானங்களின்படி தற்காலிக மற்றும் குறுகிய கால தடைகள் ஏற்படுவது சாதாரணமான நிலைமை என கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

நாளாந்தம் 4,000 மெற்றிக் டொன் டீசல் மற்றும் 3,000 மெற்றிக் டொன் பெற்றோல் எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படுவதாகவும், இது எரிபொருள் தட்டுப்பாடு காலத்துடன் ஒப்பிடும் போது அதிக எண்ணிக்கையாகும் எனவும் இலங்கை பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் மேலும் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாரஹேன்பிட்டியில் 3வது ஒசுசல திறக்கப்பட்டது

நாடு பூராகவும் அமைந்துள்ள 130 இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை வைத்தியசாலைகளும் உள்ளடங்கும் வகையில் பிரதானமான தனியார்...

இறக்குமதி, ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிக்கு அனுமதி

1969ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2025 மே 19ஆம் திகதிய...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவர் விளக்கமறியலில்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க, ஜூலை முதலாம்...