follow the truth

follow the truth

June, 16, 2025
Homeஉள்நாடுகுழந்தைகளுக்கு சத்தான உணவை வழங்க முடியாத நிலை!

குழந்தைகளுக்கு சத்தான உணவை வழங்க முடியாத நிலை!

Published on

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு சத்தான உணவை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதன்காரணமாக நன்கொடையாளர்களிடம் உதவி கோரப்படுவதாக மருத்துவமனையின் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் சந்துஷ் சேனாபதி தெரிவித்துள்ளார்.

சிறுவர்களின் உணவில் இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை போதுமான அளவு சேர்ப்பதில் தற்போது குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும், முட்டைக்கு பதிலாக உலர் பழங்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உணவுப் பொருட்களின் விலையேற்றத்துடன் விநியோகஸ்தர்கள் விநியோகத்தை குறைத்துள்ளதாலும், நன்கொடையாளர்களிடம் இருந்து பெறப்படும் உதவிகள் குறைந்து வருவதாலும் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் மீண்டும் நன்கொடையாளர்களின் உதவி தேவைப்படுவதாகவும், அதனால் பங்களிக்க கூடியவர்கள் இருப்பின் வைத்தியசாலையின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜூன் மாதத்தின் முதல் 15 நாட்களில் 63,000 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தின் முதல் 15 நாட்களில் 63,856 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக...

2009க்கு முன்னர் பெற்ற சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து?

'2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் இரத்து செய்யப்படும்.' என்று, 2025 ஜூன் மாதம்...

ஜனாதிபதி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் உள்ளிட்ட...