கொழும்பில் 50,000க்கும் அதிகமானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை!

671

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாரதூரமான முறையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்கள்.

மாளிகாவத்தை, கொலன்னாவ மற்றும் வனாத்தமுல்ல ஆகிய பகுதிகளில் போதைப்பொருள் பாவனை பாரதூரமான முறையில் அதிகரித்துள்ளன.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நகர் மற்றும் கிராம புறங்களில் போதைப்பொருள் பாவனை தீவிரமாக அதிகரித்துள்ளன.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்க விசேட சட்டம் இயற்றப்பட வேண்டும் என எதிர்தரப்பின் சுயாதீன உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here