follow the truth

follow the truth

May, 1, 2025
Homeஉள்நாடு"பாராளுமன்ற சார சங்ஹிதா" புலமை இலக்கிய நூலின் இலத்திரனியல் பிரதி பாராளுமன்ற இணையத்தளத்தில்!

“பாராளுமன்ற சார சங்ஹிதா” புலமை இலக்கிய நூலின் இலத்திரனியல் பிரதி பாராளுமன்ற இணையத்தளத்தில்!

Published on

பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் “பாராளுமன்ற சார சங்ஹிதா” புலமை இலக்கிய நூலின் இலத்திரனியல் பிரதி பாராளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

https://www.parliament.lk/ta/secretariat/academic-journal எனும் இணைப்பின் ஊடாக “பாராளுமன்ற சார சங்ஹிதா” புலமை இலக்கிய நூலின் முதலாவது மற்றும் இரண்டாவது தொகுப்பை பார்வையிட முடியும்.

சட்டவாக்க செயற்பாடுகள், நிலைபேறான அபிவிருத்தி, தேர்தல் முறைமை மற்றும் அதன் திருத்தங்கள், பாராளுமன்ற அறிக்கையிடலும் வெகுஜன ஊடகமும், பொதுமக்கள் தொடர்பு மற்றும் இலங்கை பெண்கள் அரசியலில் புதிய போக்கு ஆகிய பல்வேறு தலைப்புகளில் கல்வித்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர்களின் கட்டுரைகள் இந்நூலில் உள்ளடங்கப்பட்டுள்ளன.

இதன் மீளாய்வுக் குழுவில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ரத்னசிறி அரங்கல, கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் அஜந்தா ஹப்புஆராச்சி, களனி பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.ஜீ. யோகராஜா, கொழும்பு பல்கலைக்கழக ஸ்ரீ பாளி கல்லூரியின் கலாநிதி டியூடர் வீரசிங்க மற்றும் களனி பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் விஜயானந்த ரூபசிங்க ஆகியோர் காணப்படுகின்றனர்.

ஜனநாயகம் தொடர்பில் இலக்கிய ஆய்வுகளை மேற்கொள்வது தற்பொழுது சமூக, பொருளாதார அரசியல் போன்று அபிவிருத்திக்கும் சாதகமான தேவையாக உருவாகியுள்ளது. அதன்மூலம் உருவாகும் புதிய அறிவு, புதிய சாதனைகள் மற்றும் புதிய பரிணாமங்கள் ஊடாக ஜனநாயக சமூக முறையின் நிலைபேறான தன்மை மற்றும் பாதுகாப்பை ஏற்படுத்துவதன் மூலம் இலங்கை பாராளுமன்றத்தை மக்கள் மைய நிறுவனமாக மாற்றுவதை நோக்காகக் கொண்டு பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தினால் இந்தப் புலமை இலக்கிய நூல் வருடாந்தம் வெளியிடப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...