follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுரயில் பயணசீட்டுகளுக்கான முன்பதிவு கால அவகாசத்தில் திருத்தம்

ரயில் பயணசீட்டுகளுக்கான முன்பதிவு கால அவகாசத்தில் திருத்தம்

Published on

ரயில் பயணசீட்டை முன்பதிவு செய்வதற்காக அறிவிக்கப்பட்ட கால அவகாசத்தில் இலங்கை ரயில்வே திணைக்களம் திருத்தம் செய்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே திணைக்களம், பயணிகள் தங்கள் பயணத்திற்கு 30 நாட்களுக்கு முன்னதாக தங்களது ரயில் பயணசீட்டுக்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

ரயில் பயணத்திற்கு 14 நாட்களுக்கு முன்பு மட்டுமே பயணசீட்டு முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், செப்டம்பர் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தொடக்கம் அக்டோபர் 13 ஆம் திகதி வரை பயணிகள் தங்கள் பயணத்திற்கு 30 நாட்களுக்கு முன்னதாக பயணசீட்டுக்களை முன்பதிவு செய்யலாம்.

பயணிகளின் அதிக தேவை காரணமாக இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பில் 22 வெள்ள அபாய பகுதிகள் அடையாளம்

கொழும்பு மாவட்டத்தில் வெள்ள அபாய பகுதிகள் 22 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. வடிகால் அமைப்புகளின்...

கடவுச்சீட்டை ஒப்படைத்த டயானா கமகே

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தனது கடவுச்சீட்டை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம்...

07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று (19) அதிகாலை 03.00...