ரயில் பயணசீட்டை முன்பதிவு செய்வதற்காக அறிவிக்கப்பட்ட கால அவகாசத்தில் இலங்கை ரயில்வே திணைக்களம் திருத்தம் செய்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே திணைக்களம், பயணிகள் தங்கள் பயணத்திற்கு 30 நாட்களுக்கு முன்னதாக தங்களது ரயில் பயணசீட்டுக்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
ரயில் பயணத்திற்கு 14 நாட்களுக்கு முன்பு மட்டுமே பயணசீட்டு முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், செப்டம்பர் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தொடக்கம் அக்டோபர் 13 ஆம் திகதி வரை பயணிகள் தங்கள் பயணத்திற்கு 30 நாட்களுக்கு முன்னதாக பயணசீட்டுக்களை முன்பதிவு செய்யலாம்.
பயணிகளின் அதிக தேவை காரணமாக இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.