follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுஅனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் இலங்கை வந்தடைந்தார்

அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் இலங்கை வந்தடைந்தார்

Published on

அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் மார்ட்டின் சுன்கொங் நேற்று (11) இலங்கை வந்தடைந்தார்.

ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்ஹ பிரதமராக இருந்தபோது விடுத்த அழைப்பிற்கு அமைய அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகத்தினுடைய இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய நேற்று இலங்கையை வந்தடைந்த மார்ட்டின் சுன்கொங்கை பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர்  அங்கஜன் ராமநாதன் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க ஆகியோர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றனர்.

இந்த உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது மார்ட்டின் அவர்கள் ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்ஹ மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாட இருப்பதாக  பாராளுமன்ற செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

அத்துடன் மார்ட்டின் சுன்கொங் அவர்கள், சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்த்தனவையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

அதனையடுத்து, அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகம், பாராளுமன்ற சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாச ஆகியோரையும் சந்திக்கவிருப்பதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க SJB உடன் இணைவு

முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து...

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவர் குறித்து கம்மன்பில குற்றச்சாட்டு

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக பெயரிடப்பட்டுள்ள எலிசபெத் ஹோஸ்டின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய...

இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு வரி விதிக்க கோரிக்கை

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு வரி விதிக்குமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் விவசாய அமைச்சர்...