follow the truth

follow the truth

June, 12, 2025
Homeஉள்நாடுமாணவர்களுக்கு பகுதி நேர வேலை வாய்ப்பு

மாணவர்களுக்கு பகுதி நேர வேலை வாய்ப்பு

Published on

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு 13 மணிநேர பகுதி நேர வேலை வாய்ப்பை வழங்க பல்கலைக்கழக ஆளும் அதிகாரசபை தீர்மானித்துள்ளது.

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தின் கீழ், ஒரு மாணவர் ஒரு மணித்தியால வேலைக்காக 350 ரூபா பெற்றுக்கொள்வார்.

பல்கலைக்கழகத்தில் கல்வி சாரா சேவைகளை வழங்குவதற்கும், இணையம் மூலம் அறிவுப் பரிமாற்றம் செய்வதற்கும் தற்காலிக வேலைவாய்ப்பு நியமனம் வழங்கப்படும் என துணைவேந்தர் தெரிவித்தார்.

பேராதனை பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கம் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது.

இந்த புதிய திட்டத்தில் மாணவர்களிடையே மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே சுமார் 170 மாணவர்கள் இதற்கு விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களுக்கு ஒக்டோபர் 1ஆம் திகதி நியமனக் கடிதங்கள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆவணங்களை சோதனையிட CID குழுக்கள் சிறைச்சாலைகளுக்கு அனுப்பி வைப்பு

நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 28 குழுக்கள் நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளுக்கும்...

ஹல்துமுல்ல பிரதேச சபையின் அதிகாரம் NPP வசம்

ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவர் பதவியை தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளால் கைப்பற்றியுள்ளது. அதற்கமைய, 11 வாக்குகளைப் பெற்று...

விலங்குகள் தொடர்பான கணக்கெடுப்பு அறிக்கை வெளியானது

கடந்த மார்ச் 15 ஆம் திகதி நடத்தப்பட்ட தேசிய விலங்குகள் குறித்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பு அறிக்கை இன்று (12)...