follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுதங்க பிஸ்கட்டுக்களை கடத்த முயன்ற விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி கைது

தங்க பிஸ்கட்டுக்களை கடத்த முயன்ற விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி கைது

Published on

இரண்டு கிலோகிராம் நிறையுடைய 8 தங்க பிஸ்கட்டுக்களை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியில் கொண்டுவந்த விமான நிலையத்தின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரியொருவரை இன்று  சுங்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்டுக்களின் மொத்த பெறுமதி சுமார் 2 கோடி ரூபா என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் கைதான நபர் களனி பகுதியில் வசித்து வரும் 40 வயதுடைய விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று டுபாயில் இருந்து வந்த இந்திய பயணியொருவர் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு பயணிகள் முனையத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரியிடம் குறித்த தங்க பிஸ்கட்டுகளை வழங்கியிருக்கலாம் என சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி தனது காற்சட்டைப் பையில் தங்க பிஸ்கட்களை மறைத்து வைத்து விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள சுங்க வளாகத்தை கடக்க முற்பட்ட போது சுங்கப் பிரிவின் அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சந்தேக நபரிடம் தற்போது விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சுங்கப்பிரிவின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...