follow the truth

follow the truth

July, 13, 2025
HomeTOP1ஐ.நாவில் ரஷ்யாவுக்கு எதிராக பிரேரணை – வாக்கெடுப்பில் இருந்து விலகிய இலங்கை!

ஐ.நாவில் ரஷ்யாவுக்கு எதிராக பிரேரணை – வாக்கெடுப்பில் இருந்து விலகிய இலங்கை!

Published on

உக்ரைனின் 4 பிராந்தியங்களை தமது நாட்டுடன், ரஷ்யா இணைத்துக்கொண்டமைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அண்மையில் உக்ரைனின் பிராந்தியங்களான லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கேர்சன், ஜபோரிஜியா ஆகிய நான்கு பிராந்தியங்களில், பொதுசன வாக்கெடுப்பை நடத்தியிருந்தது.

குறித்த வாக்கெடுப்பில் வெற்றிபெற்றதாக கூறி, 4 பிராந்தியங்களையும் ரஷ்யா தம்முடன் இணைத்துக்கொண்டது.

சர்வதேச விதிமுறைகளை மீறி ரஷ்யா செயற்பட்டிருப்பதாக பல்வேறு நாடுகள் தமது கண்டனங்களை வெளியிட்டிருந்தன.

இந்தநிலையில், ரஷ்யாவுக்கு எதிரான பிரேரணையொன்று ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பான வாக்கெடுப்பு ஒன்று இலங்கை நேரப்படி இன்று அதிகாலை நடத்தப்பட்டிருந்தது.

குறித்த வாக்கெடுப்பில், பிரேரணைக்கு ஆதரவாக 143 நாடுகளும், எதிராக 5 நாடுகளும் வாக்களித்தன.

அதேநேரம், இலங்கை, இந்தியா, சீனா உள்ளிட்ட 35 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...