follow the truth

follow the truth

February, 18, 2025
Homeஉலகம்முன்னாள் குத்துச்சண்டை வீரர் ஜனாதிபதி தேர்தலில் போட்டி

முன்னாள் குத்துச்சண்டை வீரர் ஜனாதிபதி தேர்தலில் போட்டி

Published on

பிலிப்பைன்ஸ் முன்னாள் குத்துச்சண்டை ஜாம்பவான் மேணி பக்கியாவ், அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரொட்றிகோ டுட்டேர்ட்டேயின் ஆளுங் கட்சியிலுள்ள எதிர்தரப்பு ஒன்றினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை ஏற்ற பின்னர், ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகி விட்டதாக அவர் குறிப்பிட்டார்.

எட்டு பிரிவுகளில் உலக சம்பியனானவரும் பிலிப்பைன்ஸின் தேசிய ஹீரோவுமான பக்கியாவ், லாஸ் வேகாஸில் கியூப குத்துச்சண்டை வீரர் யோர்தேனிஸ் உகாஸிடம் தோல்வி அடைந்த சில வாரங்கள் கடந்த நிலையில், தனது நிலைப்பாட்டை வெளியிட்டார்.

காங்கிரஸ் கட்சி உறுப்பினராக அரசியலில் 2010ஆம் ஆண்டு பிரவேசித்த பக்கியாவ், பின்னர் செனட் சபை உறுப்பினராக தெரிவானார்..

42 வயதான பக்கியாவை பெருந்தன்மைக்காகவும் வறுமைக்கோட்டை கடந்து வந்து உலகின் மிகச் சிறந்த மற்றும் செல்வந்த குத்துச்சண்டை விரர்களில் ஒருவராக உயரிய நிலையை அடைந்தமைக்காகவும் பிலிப்பைன்ஸ் மக்கள் போற்றுகின்றனர்.

2022 ஜனாதிபதி தேர்தலில் டுட்டேர்ட்டேயின் புதல்வி சாராவை பக்கியாவ் எதிர்த்து போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சட்டவிரோதமாக தங்கியதாக அடுத்தடுத்து 2 விமானங்களில் இந்தியர்களை அனுப்பிய அமெரிக்கா

அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆவணங்களின்றி தங்கியிருந்ததாக, இந்தியாவைச் சேர்ந்த 112 நபர்கள் மூன்றாம் கட்டமாக நேற்றிரவு( 16) திருப்பி அனுப்பப்பட்டனர். பஞ்சாபின்...

ஹமாஸ் நரக வேதனையை அனுபவிக்க நேரிடும் – எச்சரித்த இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் இடை யே கடும் போர் நடந்தது. காசாவில் இஸ்ரேல்...

டீப்சீக் செயலிக்கு தென் கொரியா தடை

சீனாவை சேர்ந்த செற்கை நுண்ணறிவு (AI) செயலியான டீப்சீக்-ஐ டவுன்லோட் செய்ய தென் கொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. டீப்சீக்...