follow the truth

follow the truth

January, 17, 2025
Homeஉள்நாடு6 மாதங்களுக்கு மேலாக நீர் கட்டணம் செலுத்தாத 73,000 பேருக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்படும்

6 மாதங்களுக்கு மேலாக நீர் கட்டணம் செலுத்தாத 73,000 பேருக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்படும்

Published on

ஆறு மாதங்களுக்கு மேலாக நீர் கட்டணத்தைச் செலுத்தாத சுமார் 73 ஆயிரம் நுகர்வோருக்கு நீர் விநியோகத்தை நிறுத்த தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நீர் வழங்கல் வடிகால் அமைப்பு அமைச்சின் தீர்மானத்துக்கமைய இந்நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

6 மாதங்களுக்கு மேலாக நீர் கட்டணங்களைச் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி ஊடாக தகவல் அனுப்பப்பட்டுள்ளதுடன், அதன் பின் சுமார் 100 வாடிக்கையாளர்கள் கட்டணத்தைச் செலுத்தியுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

நுகர்வோரிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய தொகை 145 கோடி ரூபாவாகும். எனினும் நுகர்வோர் தமது பட்டியல் கொடுப்பனவைச் செலுத்தாததால் சபை 800 கோடி ரூபாவை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீன கம்யூனிஸ்ட் கட்சி செயலாளருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சிச்சுவான் மாகாண சீன கம்யூனிஸ்ட்...

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை (18) நடைபெறவுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே...

மனுஷ நாணயக்காரவின் சகோதரருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர இரோஷன நாணயக்காரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அவர் இன்று (17)...