follow the truth

follow the truth

July, 27, 2025
Homeஉள்நாடுதொழில்வாய்ப்பு மோசடி : இருவருக்கு விளக்கமறியல்

தொழில்வாய்ப்பு மோசடி : இருவருக்கு விளக்கமறியல்

Published on

ருமேனியா தொழில்வாய்ப்பு மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட இத்தாலிய பிரஜை உள்ளிட்ட இருவர் எதிர்வரும் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஏனைய இலங்கை பிர​ஜைகள் இருவருக்கும் தலா 05 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி சட்டவிரோதமாக நேர்முகத் தேர்வு நடத்திய நால்வர் பதுளை பிரதேசத்தில் வைத்து நேற்று முன்தினம்(20) கைது செய்யப்பட்டனர்.

ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாக, வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அறிவிக்காமல் முகப் புத்தகத்தில்(Facebook) விளம்பரம் செய்யப்பட்டே குறித்த நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது.

பதுளை பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட இந்த நேர்முகத் தேர்வில் 30 பேர் வரை கலந்து கொண்டிருந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளி குறித்து பொலிஸார் விளக்கம்

பத்தரமுல்லை – பெலவத்தை பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் பொலிஸார் அனுமதியின்றி நுழைந்ததாக சமூக ஊடகங்களில் எழுந்த குற்றச்சாட்டுகள்...

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடகப் பணிப்பாளர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பணிப்பாளராகவும் ஊடகப் பேச்சாளராகவும் நியமிக்கப்பட்ட பிரிகேடியர் எஸ். ஜோசப், கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். முன்னர் இந்தப்...

காடுகளுக்குள் துப்பாக்கிகளை எடுத்துச் செல்வது குறித்து விசேட விசாரணை

வனப்பகுதிகளுக்குள் துப்பாக்கிகளை எடுத்துச் செல்வது குறித்து விசேட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக வனப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் யானைகள்...