LPL போட்டிகள் 2 வது முறையாக டிசம்பரில்

577

லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் போட்டி 2 வது முறையாக எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய குறித்த தொடர் எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த தொடரில் 5 அணிகள் விளையாடவுள்ளதுடன், ஒவ்வொரு அணியும் 14 உள்ளூர் வீரர்களையும் 6 வெளிநாட்டு வீரர்களையும் கொண்டுள்ளது.

இதேவேளை, லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்களின் பதிவுகள் நாளை (24) முதல் ஆரம்பிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here