follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுகருத்தடை அறுவை சிகிச்சை விலையும் அதிகம்

கருத்தடை அறுவை சிகிச்சை விலையும் அதிகம்

Published on

அரசு கால்நடை மருத்துவ மனைகளில் நாய், பூனைகளுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளதால், தனியார் கால்நடை மருத்துவமனைகள் மூலம் இந்த கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய அதிக பணம் செலவாகுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு முன், அரசு கால்நடை அலுவலகங்கள் மூலம் நாய், பூனைகளுக்கு கருத்தடை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையின் மூலம் இந்த திட்டம் இலவசமாக தொடங்கப்பட்டது. அங்கு கால்நடை மருத்துவ அலுவலகங்களுக்கு அரசு சார்பில் இலவச மலட்டு அறுவை சிகிச்சை மருந்துகள் வழங்கப்பட்டு வாரம் ஒருமுறை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

ராஜித சேனாரத்ன சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில், இந்த கருத்தடை திட்டம் சுகாதார திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதன் பின்னர் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தொடர்பான மருந்துகள் வெளியிடப்படவில்லை எனவும் கால்நடை இராஜாங்க அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த வேலைத்திட்டம் சுகாதார அமைச்சின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ள போதிலும் போதிய கால்நடை வைத்தியர்கள் அமைச்சில் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன் காரணமாகவே இத்திட்டம் நிறுத்தப்பட்டு தனியார் கால்நடை மருத்துவ மனைகளில் அறுவை சிகிச்சை செய்ய 1500 முதல் 3000 ரூபாய் வரை செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...