விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்காக 4.2 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

461

இலங்கையில் தற்போது நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இருந்து 4.2 பில்லியன் ரூபாவை அரசாங்கம் நாட்டின் விளையாட்டு வளர்ச்சிக்காக ஒதுக்கியுள்ளதாக விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் அமல் டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 2024ம் ஆண்டு பிரான்சில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க 178 விளையாட்டு வீரர்களை உள்ளடக்கிய உயர் செயல்திறன் கொண்ட குழு உட்பட நான்கு தேசிய குழாம்கள் தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் மேலும் சில வெளிநாட்டு பயிற்சியாளர்களும் எதிர்வரும் மாதங்களில் நாட்டிற்கு வர உள்ளனர் எனவும் தேசிய விளையாட்டு சபையின் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here