ஓட்டுநர் உரிமம் பெற நடைபெறும் சோதனையின் போது கண்காணிப்பாளர்கள் லஞ்சம் பெறுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் சிசிடிவி கேமராக்கள் மூலம் ஓட்டுநர் உரிமம் பெற நடைபெறும் சோதனைகளை கண்காணிக்கும் நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் எழுத்து மூல தேர்வுகளில் கைரேகை ஸ்கேனிங்கை அறிமுகப்படுத்துவது குறித்தும் திணைக்களம் பரிசீலித்து வருவதாகவும் விரைவில் நாடு முழுவதும் குறித்த நடைமுறை அமுலுக்குவரும் எனவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.