follow the truth

follow the truth

July, 26, 2025
Homeஉள்நாடு2023 இல் மிக நீண்ட மின்வெட்டு – இலங்கை மின்சார சபை

2023 இல் மிக நீண்ட மின்வெட்டு – இலங்கை மின்சார சபை

Published on

அடுத்த வருடம் ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு முன்னர் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி கிடைக்காவிட்டால், 2023 ஜூலைக்குள் வரலாற்றில் மிக நீண்ட மின்வெட்டை நாடு சந்திக்க நேரிடும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில்,

எமது நாட்டுக்கு 60,000 மெற்றிக் தொன் நிலக்கரி ஏற்றிச் செல்லும் 38 கப்பல்கள் தேவைப்பட்ட போதிலும், நாட்டுக்கு 4 கப்பல்களே கிடைத்துள்ளன.

ஐந்தாவது கப்பலுக்கு துறைமுகத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டன.கப்பல் வர தாமதமாகும்.இந்த 38 கப்பல்களும் ஏப்ரல் 15ம் தேதிக்குள் வரவில்லை என்றால் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பெரிய அளவில் மின்வெட்டு ஏற்படும்.

லக்விஜய மின் உற்பத்தி நிலையம் நாட்டின் மின்சாரத் தேவையில் 45% வழங்குகிறது. இப்போது நிலக்கரி கிடைக்கவில்லை என்றால், மற்ற அனல் மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் வாங்கினால், செலவு மிக அதிகமாக இருக்கும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சமீபத்திய நாட்களில் 21 காட்டு யானைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உள்ளன

கடந்த இரண்டு மாதங்களில் 21 காட்டு யானைகள் காயமடைந்து சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துணை அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி...

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பேச்சாளர் நியமனம்

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பணிப்பாளர் மற்றும் பேச்சாளராக பிரிகேடியர் பிரேங்க்ளின் ஜோசப், நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் இந்தப் பதவியில் இருந்த...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

மத்திய ,சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் எனவும்...